000 | : | nam a22 7a 4500 |
008 | : | 170508b ii 000 0 tam d |
245 | : | _ _ |a வைகுண்டநாதர் |
300 | : | _ _ |a வைணவம் |
340 | : | _ _ |a மணல் கல் |
500 | : | _ _ |a ஆதிசேஷன் குடையாய் நிற்க வைகுண்டத்தில் பெருமாள் அமர்ந்த கோலம் |
510 | : | _ _ |a
|
520 | : | _ _ |a திருமால் இடது காலை குத்திட்டு, வலது காலை தொங்க விட்டவாறு உத்குடிகாசனத்தில் அமர்ந்துள்ளார். நான்கு கைகளில் பின் கைகள் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளன. வலது முன் கையை ஊன்றிய கையாகவும் (நித்ரா முத்திரை), இடது முன் கை அருகில் நிற்கும் பூமகளை அணைத்தபடியும் வைத்துள்ளார். கிரீட மகுடம் தரித்துள்ள திருமாலின் தலைக்கு மேலே ஆதிசேஷன் குடை பிடித்துள்ளது. நீள் காதுகளில் மகர குண்டலங்கள் விளங்குகின்றன. கழுத்தணிகளாக கண்டிகை, சரப்பளி அழகு செய்கின்றன. தோள்வளை, முன்வளை கையணிகளாக விளங்குகின்றன. வயிற்றில் உதரபந்தம், மார்பில் அணி செய்யப்பட்ட முப்புரிநூல் செல்கிறது. மேலே கந்தர்வர் இருவர் பறந்த நிலையில் காட்டப்பட்டுள்ளனர். திருமாலின் இடது புறம் நிலமகள் இரு கைகளையும் கூப்பி வணங்கிய படி தன் பாரங்களைத் தெரிவிக்கின்றாள். தேவி கரண்டமகுடம் தரித்துள்ளாள். தேவியின் தலைக்கு மேலே கைகளை உயர்த்தி போற்றும் உருவம் காட்டப்பட்டுள்ளது. விஷ்ணுவின் வலது பாதம் அருகே ஒருவர் கருடாசனத்தில் அமர்ந்துள்ளார். எழில் முகத்தினராய் விளங்கும் அவரின் இடது கை சிதைந்துள்ளது. வலது கை கடக முத்திரை காட்டியுள்ளது. இந்த ஆண் உருவம் கருடனாயிருக்கலாம். |
653 | : | _ _ |a விஷ்ணு, பெருமாள், திருமால், வைகுந்த நாதர், வைகுண்டப் பெருமாள், வைகுண்ட பெருமாள் கோயில், வைகுந்தப் பெருமாள் கோயில், இரண்டாம் நந்திவர்மன், காஞ்சிபுரம், தொண்டைமண்டலம், பல்லவர் கலைகள், பல்லவர் கலைப்பாணி, பல்லவர் சிற்பங்கள், விஷ்ணு சிற்பங்கள், பெருமாள் சிற்பங்கள், திருமால் சிற்பங்கள் |
700 | : | _ _ |a காந்திராஜன் க.த. |
752 | : | _ _ |a வைகுண்டப் பெருமாள் கோயில் |b கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |c காஞ்சிபுரம் |d காஞ்சிபுரம் |f காஞ்சிபுரம் |
905 | : | _ _ |a கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் நந்திவர்மப் பல்லவன் |
914 | : | _ _ |a 12.83711742 |
915 | : | _ _ |a 79.71008599 |
995 | : | _ _ |a TVA_SCL_000092 |
barcode | : | TVA_SCL_000092 |
book category | : | கற்சிற்பங்கள் |
Primary File | : |